தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் கர்நாடக மாநிலத்தில் பெண் சிசுக்கொலை தொடர்பான வழக்கு அடுத்தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பெண் சிசுக்கொலை தடுக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் தினேஷ் குண்டுராவ் இடம் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், “மாநிலத்தில் நடைமுறையில் உள்ள பெண் சிசுக்கொலை தடுக்கும் சட்டம் திறம்பட செயல்படாதது வருத்தம் அளிக்கிறது. இதனால் புதிய கொள்கை விரைவில் வகுக்கப்பட உள்ளது. அதில் காவல்துறையின் ஒத்துழைப்பு அவசியம் என்பதால், மாநில அளவிலான அதிரடிப்படை குழுவை அமைக்க உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் அரையாண்டு தேர்வில் வந்த மாற்றம்.., தயாராக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்!!!