கொரோனா தற்போது நாடெங்கிலும் தீவிரமா பரவி வரும் நிலையில் இதற்கான நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது ஃபேவிஃபிராவிர் என்றா மாத்திரையை மும்பியை சேர்ந்த கிளென்மார்க் பாராமெடிக்கல்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
ஃபேவிஃபிராவிர்
இந்த மருந்தை லேசாக மற்றும் மிதமாக உள்ள கொரோனா பதித்துள்ள நபருக்கு கொடுப்பதன் மூலம் 88% வரை வெற்றி கிடைத்துள்ளது. இது வாய் வழியாக கொடுக்கப்படும் மருந்து. இதனால், நரம்புகள் வழியாக கொடுக்கப்படும் சிகிச்சையை காட்டிலும் எளிதானதாக இருக்கும்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஃபேவிஃபிராவிர் மருந்துக்கான உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நேற்று வழங்கியுள்ளது. இந்த மருந்துக்கு ‘அவசரகால பயன்பாடு ‘ என்பதன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.ஃபேபி ப்ளு என்ற பிராண்டின் கீழ் ஃபேவிஃபிராவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு கொடுக்க DCGI அனுமதி அளித்துள்ளது. இதன்படி, ஃபேவிபிராவீர் (ஃபேவிபுளூ) என்ற பெயரிலான மாத்திரை இன்று மாலை முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடும் என கூறப்படுகிறது. இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ. 103 ஆகும்.
மருந்து அம்சங்கள்
முதல் நாள் மட்டும் நோயாளிகளுக்கு 1800 மி.கி மாத்திரையை எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அடுத்த 13 நாட்களுக்கு இந்த மாத்திரையை 1800 மி.கி இரண்டு ஈடுத்த்துக்கொண்டாள் போதும். இந்த மாத்திரையை ரகரை நோய் மற்றும் ஹைப்பர்டென்ஸன் உள்ள கொரோனா நோயாளிகள் கேட்டுது கொள்ளலாம்.
மேலும் கொரோனா முற்றியுள்ள நோயாளிகளுக்கு ஃபேவிஃபிராவிர் மற்றும் யூமிஃபெனோவிர் என்ற ஏற்று மாத்திரைகளை பயன்படுத்தி மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜப்பானின் ஃபியூஜிஃபிலிம்ஸ் ஹோல்டிங் நிறுவனமும் அவிகான் என்ற பிராண்ட் பெயரில் ஃபேபிஃபிராவிர் மருந்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.