தமிழ் சினிமாவில், முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த பூஜா, மீண்டும் சினிமாவுக்கு கம்பேக் கொடுப்பது பற்றி தனது ரசிகர்களிடம் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
மீண்டும் என்ட்ரி:
கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வந்தவர் நடிகை பூஜா. இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில், உருவாகி மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நான் கடவுள் படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் தன் அழுத்தமான நடிப்பை பதிவு செய்தார். தொடர்ந்து அஜித், மாதவன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது இலங்கையிலும் பல படங்கள் நடித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல், தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த இவரை ரசிகர்கள் சிலர் திடீரென நினைவு கூர்ந்துள்ளனர். இது குறித்து பதிவிட்ட நடிகை பூஜா, இவ்வளவு ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை நினைவு படுத்தியதற்கு நன்றி என தெரிவித்தார். இதுபோக, மீண்டும் நீங்கள் நடிக்க வருவீர்களா? என கேட்டதற்கு, எனக்கு 44 வயதாகிறது, இந்த வயதில் போய் கம் பேக் கொடுப்பதா? என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது, இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்