நாதஸ்வரம் சீரியலில் நடித்து புகழ் பெற்ற பிரபல நடிகையான ஸ்ருதி சண்முகப்பிரியா, பிரபல பாடி பில்டர் அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
திருமண போட்டோஸ் :
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற பாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த, சீரியலை தொடர்ந்து வாணி ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தார். இதுபோக, தனுஷ் நடிப்பில் வெளியான கொடி என்ற படத்தில் நடித்து அசத்தினார். கடைசியாக பாரதி கண்ணம்மா வில் பாரதியின் அக்காவாக நடித்து அசத்தினார்.
இந்த நிலையில், பிரபல பாடி பில்டர் அரவிந்த் சேகர் என்பவரை அதிரடியாக திருமணம் செய்துள்ளார். அரவிந்த் சேகர் 2022 ஜேபி கிங்ஸ் கிளாசிக் போட்டியில் சில்வர் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இருவரும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதையடுத்து பலரும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்