தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கோடை காலத்திற்கு முன் கூட்டியே குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வாகனங்களை கழுவுதல், தோட்ட பராமரிப்பு போன்றவைகளுக்கு தடை விதித்துள்ளனர். மீறுவோர்களுக்கு ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
அதன்படி இதுவரை கார் கழுவவும், வீட்டுத் தோட்டத்திற்கு குடிநீரை பயன்படுத்தியதாகவும் 22 குடும்பங்களுக்கு தல ஐயாயிரம் ரூபாய் அபராதத்தை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.