இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்த கட்டுப்பாட்டு விதிமுறையை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி அரசாங்க கொள்கைகளை விமர்சனம் செய்வது, ரகசியத் தகவலை பகிர்வது, அரசியல் அல்லது மதச்சார்பற்ற உள்ளடக்கத்தில் ஈடுபடுவது அல்லது சக பணியாளர்கள் அல்லது தனிநபர்களைப் பற்றிய தகாத கருத்துக்களை, சமூக ஊடகங்களில் பதிவிடக்கூடாது. மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.