போலிகளை காலிசெய்ய களமிறங்கிய ‘ஃபேஸ்புக்’ (Facebook) – கொரோனா வைரஸ் புரளிகளுக்கு அதிரடி தடை..!

0

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து தங்களது வலைதளத்தில் வலம்வரும் தகவல்களை நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து உள்ளது.

போலியான தகவல்கள்..!

சீனாவில் இதுவரை கொரோனா வைரஸினால் 2700 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இதன் வீரியம் அதிகரித்துக் கொண்டே வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் தடுப்பு முறை மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்தும் சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன. தற்பொழுது இதைத் தடுக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

இத்தகைய போலி தகவல்களை தங்கள் பக்கத்தில் இருந்து நீக்குவோம் என டிக் டாக், பிண்ட்ரெஸ்ட் நிறுவனங்களும் தெரிவித்து உள்ளன. அந்த வைரசை விட அதை வைத்து பரப்பப்படும் போலி தகவல்கள் மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here