யூரோ 2020 கால்பந்து இறுதி போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள வெம்பேலே மைதானத்தில் நடைபெற்றது. அதில் 52 ஆண்டுக்கு பின் இத்தாலி அணி போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருதை லியானார்டோ போனுசி பெற்றார், ஆனால் கோல்டன் சூ விருதை போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோவுக்கு கொடுக்கப்பட்டது.
இங்கிலாந்து இத்தாலி 2020 இறுதி போட்டி…
யூரோ (ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்) 2020 காலப்ந்த்து போட்டி லண்டனில் நாட்டில் நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 24 அணிகள் பங்கு பெற்றது. அதில் ஒரு சில அணிகள் லீக் மேட்சிலேயே வெளியேறினார்கள். பின் இறுதி போட்டியான நாக் அவுட் மேட்சிற்க்கு இங்கிலாந்து – இத்தாலி ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இரு அணிகளின் இறுதி போட்டிற்கு மக்களிடமும் ரசிகர்களிடமும் மிக அதிகமான எதிர்பார்ப்புகள் இருந்தன, இந்நிலையில் இறுதி போட்டியில் கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கு பின் இத்தாலி அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி யூரோ சாம்பியன்ஷிப் கோப்பையை இத்தாலி அணி வென்றது. இதனால் இத்தாலி அணியின் ரசிகர்களும் மக்களும் மிக உற்சாகமாகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பின் அணியின் வீரர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன, அதில் யூரோ சாம்பியன்ஷிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை இத்தாலி அணியின் லியானார்டோ போனுசி தட்டி சென்றார், தொடரின் கோல்டன் பூட்டை போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ 5 கோல்கள் அடித்ததற்காக பெற்றார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்