எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் ஈஸ்வரியை முன்னாடியே பொண்ணு கேட்டார் என்ற விஷயம் தெரிஞ்சு குணசேகரன் ஆடிப் போய் உள்ளார். இதனால் அடுத்தடுத்து என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஈஸ்வரி வீட்டுக்கு வர அவரிடம் குணசேகரன் ஜீவானந்தம் தான் உனக்கு எல்லா விஷயமும் சொல்லி கொடுத்தானா என்று கேட்க, கதிர் சொல்லி கொடுத்திருப்பான் என்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
உடனே ஈஸ்வரி வாயை அடக்கி பேசு என கதிரை எச்சரிக்கிறார். பின் ஈஸ்வரியை பற்றி குணசேகரன் தர்ஷன், தர்ஷினியிடம் தப்பாக பேச இருவருக்கும் இடையே சண்டை வருகிறது. பின் குணசேகரன் ஈஸ்வரியிடம் உங்க அப்பா சரின்னு சொல்லி இருந்தால் ஜீவானந்தத்தை கல்யாணம் பண்ணி இருப்பையா என்று கேட்க அவரும் ஆமாம் என்று திமிராக பதில் சொல்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.