நிலவின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்ய “சந்திரயான் 3” விண்கலம், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1” விண்கலம் “பிஎஸ்எல்வி-சி 57” ராக்கெட் உதவியுடன் இன்று (செப்டம்பர் 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட உள்ள இந்த ராக்கெட் நிகழ்வை, பொதுமக்கள் நேரில் கண்டு ரசிக்க ஆன்லைனில் முன்பதிவு டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுமார் 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவு டிக்கெட்கள் விற்று தீர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.