எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி சித்தர் திருமணத்தை எப்படியாவது யாருக்கும் தெரியாமல் நடத்த வேண்டும் என குணசேகரன் உமையாள் இருவரும் சதி திட்டம் தீட்டுகின்றனர். இந்த பக்கம் ஜனனியின் அம்மா, தங்கையை எதற்காக போலீசார் கைது செய்தார்கள் என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் சக்தி ஜனனி இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் அவர்களை எதற்காக கைது செய்தீர்கள் என கேள்வி கேட்கின்றனர்.
இந்த பக்கம் உமையாள் சித்தார்த்தை தேடுகின்றார். ஆனால் சித்தார்த் வீட்டில் இல்லாததை அறிந்து அதிர்ச்சியாகிறார். அந்த நேரத்தில் குணசேகரன் மாப்பிள்ளையை எங்கே என்று கேட்க உமையாள் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இதை பார்த்த கதிர் நக்கலாக சிரிக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் தர்ஷினியின் திருமணத்தை நிறுத்த கதிர் தான் சித்தார்த்தை கடத்தி வைத்திருப்பார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது.