இந்தியாவில் மிகச் சிறந்த தேசிய தொண்டு செய்பவர்களுக்கு, மிக உயரிய விருதான “பாரத ரத்னா”-வை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியில் நடைபெறும் விழாவில் தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விருதை, அவரது குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வழங்கினார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் சரண்சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்பூர் தாகூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி உள்ளதால், ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.