எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரைக்கு யாருடன் கல்யாணம் நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய எபிசோடில் கூட ஆதிரையின் கல்யாணத்துக்காக அனைவரும் மண்டபத்துக்கு கிளம்புகின்றன. அந்த நேரத்தில் குணசேகரனுக்கு போலீசார் போன் பண்ணி SKR குடோனுக்கு வரும்படி சொல்கிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட்டில் சாருபாலா அருணை ஒப்படைத்தால் மட்டும் தான் கல்யாணத்தை நடத்த விடுவேன். இல்லைன்னா இந்த கல்யாணம் நடக்காது என குணசேகரனை மிரட்டுவாராம். சாருபாலாவின் இந்த மிரட்டலுக்கு கதிர் உன்னால முடிஞ்சத பாருடி. நீ எல்லாம் பெரிய ஆளா என எகிறுவாராம். இந்த பக்கம் இது எதுவுமே தெரியாமல் ஜனனி, ஆதிரை அருண் கல்யாணத்தை நடத்த ஏற்பாடு பண்ணுவாராம்.
ஐயோ உடம்பெல்லாம் வலிக்குது., ஆடு மேய்க்க சொல்லி அடிக்குறாங்க., சவுதியில் சிக்கி கதறும் இந்தியர்!!
ஆனால் கடைசியில் SKR, குணசேகரன் குடும்பத்தின் ஒட்டு மொத்த ஆட்டமும் ஜீவானந்தம் பிடியில் சிக்கிவிடுமாம். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஜனனி திண்டாடுவாராம். அடுத்து வரும் எபிசோட்டில் ஜீவானந்தத்தை சரி கட்டி ஜனனி ஆதிரை அருண் திருமணத்தை நடத்துவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.