பொதுவாக குடும்ப கஷ்டத்தில் இருக்கும் மக்கள் தங்களில் வாழ்வாதாரத்தை அதிகரித்து கொள்ள வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வராயன் என்ற ஊரை சேர்ந்த அசோக் கார் ஓட்டும் பணிக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் அவருக்கு அங்கு ஓட்டுநர் பணி கொடுக்காமல் ஆடு மேய்க்கும் வேலை தான் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சவுதியில் நிலவும் கடும் வெயிலின் காரணாமாக அசோக்கின் உடம்பு முழுவதும் கொப்புளங்கள் வந்துள்ளது. இதனால் தன்னை இந்தியாவிற்கு அனுப்பிவிடும் படி தன் உரிமையாளரிடம் கேட்ட அசோக்கை அங்கு உள்ளவர்கள் கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளாராம்.
ஒடிசா விபத்தின் எதிரொலி: சென்னை ரயில்கள் ரத்து & 5 வழித்தடங்கள் மாற்றம்…, முழு லிஸ்ட் உள்ளே!!
இதன் காரணமாக தன் கணவர் 2 மாதங்களாக வீட்டுக்கு சம்பளம் எதுவும் அனுப்பவில்லை. மேலும் தன் மூன்று குழந்தைகளுடன் இங்கு கஷ்டப்பட்டு வருவதாகவும் தன் கணவரை வெளிநாட்டில் இருந்து மீட்டு கொடுக்கும் படியும் அவரது மனைவி அர்ச்சனா கண்ணீர் மல்க காவல் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.