தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் முதல் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்து உள்ளனர். முழு விவரம் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறந்த பின்னரே தெரிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் பேசிய அவர், அரசு பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணி முறையாக நடைபெறுகிறதா? என்பதை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ள வேண்டும். அதேபோல் கம்ப்யூட்டர் வகுப்பிற்கு ரூ.200 வசூல் செய்ய முன்பு அறிவித்து இருந்தோம். தற்போது இதற்கென அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கியுள்ளதால் இந்த கட்டணத்தையும் மாணவர்கள் செலுத்த தேவையில்லை.
உன்னால முடிஞ்சத பாருடி.., சாரு பாலாவிடம் எகிறிய கதிர்.., குணசேகரன் நிலைமை என்னாகும்!!!
இதனை மீறி அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் ஏதேனும் ஆசிரியர்கள் கட்டணம் வசூல் செய்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.