இந்தியாவில் உள்ள எல்லா தனியார் மற்றும் அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் போக வருங்கால தேவைக்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ வைத்திருப்பது வழக்கம். இம்முறையால் நம் பணிபுரியும் போது அரசாங்கம் தரும் பணம் மற்றும் நிர்வாகம் தரும் பணமும் தங்களது அக்கவுண்ட் மூலம் பணம் செலுத்தப்படும்.
இதனால் வருங்காலத்தில் வேலையை விட்டு வரும் போது அந்த பிஎஃப் பணம் கை கொடுக்கும் நோக்ககத்தில் இம்முறை கொண்டு வரபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓய்வூதியம் பெறும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தற்போது வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான புதிய அறிவிப்புகளை தற்போது வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, வேலையை விட்டு நிற்கும் பணியாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கடைசியாக நவம்பர் மாதம் 1 முதல் 31ம் தேதி வரை வருடத்தில் நடந்த வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிப்பது வழக்கத்தில் ஒன்று. இதனை தொடர்ந்து EPFO தனது ட்விட்டர் பதிவில் ஒரு அறிக்கையை விடுவித்துள்ளது.
அந்த டிவீட்டரில், எந்த நேரத்திலும் ஒரு வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம், மேலும் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. புதிதாக அமலுக்கு வந்த டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை UMANG செயலி அல்லது பொதுவான சேவை மையத்தின் (CSC) மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.