2022-23 ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15% ஆக EPFO அமைப்பு நிர்ணயித்துள்ளது
EPFO
இந்தியாவில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதந்தோறும் அவர்களது ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வூதியமாக EPFO கணக்கில் அரசு வழங்கி வருவது வழக்கம். சமீபத்தில் கூட EPFO அமைப்பு நிர்பத் சேவா, 2.0 போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி ஊழியர்களின் நலனுக்காக பல சலுகைகளை செய்யும் EPFO அமைப்பு கடந்த 21 ஆம் தேதி அன்று CBT கூட்டத்தை கூடியது. இந்த கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆண்டுக்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.15% ஆக நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தனர்.
ஐபிஎல் அணியில் இணைந்த காஸ்ட்லி வீரர்…, உலக கோப்பையை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று தருவாரா??
மேலும் CBT யின் முடிவுக்கு பிறகு வட்டி விகிதத்திற்கான ஒப்புதலை வழங்க நிதி அமைச்சகத்துக்கு அனுப்பப்படும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என CBT குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5% ஆக நிர்ணயித்தது குறிப்பிடத்தக்கது.