ஐபிஎல் அணியில் இணைந்த காஸ்ட்லி வீரர்…, உலக கோப்பையை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று தருவாரா??

0
ஐபிஎல் அணியில் இணைந்த காஸ்ட்லி வீரர்..., உலக கோப்பையை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று தருவாரா??
ஐபிஎல் அணியில் இணைந்த காஸ்ட்லி வீரர்..., உலக கோப்பையை தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்று தருவாரா??

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட காஸ்ட்லி வீரரான சாம் கரன் தனது பயிற்சியை தொடங்க பஞ்சாப் அணியில் இணைந்துள்ளார்.

ஐபிஎல்:

ஐபிஎல் வரலாற்றிலேயே, அதிக தொகைக்கு இங்கிலாந்தின் சாம் கரன் கடந்த ஆண்டு நடந்த மினி ஏலத்தின் மூலம் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இவரை ஏலத்தில் வாங்க பல முன்னணி அணிகள், போட்டி போட்ட போதிலும், 18.50 கோடிக்கு பஞ்சாப் அணி தங்களது அணிக்கு தட்டி தூக்கியது. இதற்கு முன், CSKயின் சுட்டி குழந்தை என அழைக்கப்பட்ட இவர், இந்த ஏலத்திற்கு பிறகு காஸ்ட்லி வீரர் என அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர், கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல, ஆல் ரவுண்டராக தனது சிறந்த பங்களிப்பை அளித்திருந்தார். இதன், பிரதிபளிப்பே இந்த ஏலத்தில் இவ்வளவு காஸ்ட்லி வீரராக இவர் திகழ்ந்ததற்கு காரணம். இந்த காஸ்ட்லி வீரரான சாம் கரன், தற்போது ஐபிஎல் சீசனுக்காக, பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியில் தற்போது இணைந்துள்ளார்.

AK 62 வரலைனா என்ன.., ரசிகர்களுக்காக அந்த படத்தை இறக்க முடிவெடுத்த படக்குழு – சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்!!

இவர், இந்த சீசனில் தனது ஆல் ரவுண்டர் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தும் பட்சத்தில், பஞ்சாப் அணி மற்ற அணிகளுக்கு அதிக நெருக்கடி கொடுக்க கூடும். பஞ்சாப் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள தவான், இந்த எதிர்வரும் ஐபிஎல் தொடர் மூலம், இந்திய அணிக்கு திரும்புவதற்கான வழியை அடைவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here