அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் வாபஸ் – பிரதமர் அதிரடி உத்தரவு!!

0

நாட்டில் கொரோனா தொற்று பரவல் பெருமளவு குறைந்துள்ளதால், இதுவரை அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்படுவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் வாபஸ்:

இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. நாட்டில், இதுவரை சுமார் 1.70 லட்சம் மக்கள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் குறைந்து நிலைமை சீராகி வருகிறது. இதனால், அங்கு அமலில் இருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் வாபஸ் பெறப்படுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக, இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில், இதற்கான புதிய விதிமுறைகளை அவர் வெளியிடுவார் என பேசப்படுகிறது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், இந்த கொரோனாவுடன் வாழ நாம் பழகிக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி மூலம்  நமக்கான நிலையான பாதுகாப்பை நாம் உருவாக்கி உள்ளோம் என்றும் பதிவிட்டு உள்ளார். ஆனால், அரசின் இந்த முடிவுக்கு, அந்நாட்டு விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் அவசரம் வேண்டாம் எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here