#INDvsENG டெஸ்ட் தொடர் – பயிற்சியை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதற்காக சென்னையில் இங்கிலாந்து அணி வீரர்கள் இன்று முதல் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

இந்தியா vs இங்கிலாந்து:

தற்போது அடுத்த மாதம் 5ம் தேதி முதல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னையில் வைத்து நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். வரும் 5ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ம் தேதி அன்று சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வைத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 24 தேதியும் கடைசி டெஸ்ட் போட்டி ஏப்ரல் மாதம் 4ம் தேதியும் தொடங்க உள்ளது. தற்போது முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அணிகள் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை வந்த வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் முன்னதாகவே சென்னை வந்த இங்கிலாந்து அணியின் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் மற்றும் பர்ன்ஸ் ஆகியோருக்கு இன்றுடன் தனிமைப்படுத்துதல் காலம் முடிவுக்கு வந்துள்ளது.

#INDvsENG டெஸ்ட் தொடர் – இங்கிலாந்து அணியில் குழப்பம்!!

எனவே அவர்கள் மூவரும் இன்று முதல் தங்களது பயிற்சியை மேற்கொள்ள உள்ளனர். மீதமுள்ள அனைத்து வீரர்களும் வரும் செவ்வாய்கிழமை முதல் பயிற்சியில் ஈடுபட உள்ளார்கள். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் 2வது கொரோனா பரிசோதனை இங்கிலாந்து அணி வீரர்களுக்கு பரிசிசோதிக்கப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here