விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் இப்போது பல அதிரடியான திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இதில் இப்போது அர்ஜுனனின் அக்கா கணவரே அவருக்கு எதிரியாக மாறி விட்டார். மேலும் அவர் அர்ஜுனனின் தலையில் அடிக்க அவர் கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறார். இதற்கு காரணம் தமிழ் தான் என ராகினி தவறாக புரிந்து கொள்கிறார். இதனால் குடும்பத்திற்குள் பல பூகம்பங்கள் வெடிக்கிறது. இப்படி சீரியல் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் எப்படி இருக்கும் என்று பார்த்தால் அர்ஜுன் கோமா ஸ்டேஜில் இருந்து கண் முழித்து நடந்த அனைத்து உண்மைகளையும் சொல்லி ராகினி மற்றும் தமிழ் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்பாராம். பின் சொத்தையும் கோதை, நடேசன் பெயருக்கே எழுதி வைத்து விடுவாராம். இதுபோன்றுதான் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
தமிழக மக்களே., வேட்பாளர்கள் இதை கொடுத்தால் வாங்காதீங்க? தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!!!