ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை அண்மையில் வாங்கிய எலான் மஸ்க், இனி மாதந்தோறும் ட்விட்டர் கணக்கு வைத்திருக்கும் பயனர்களிடம் ரூபாய் 1600, கட்டணம் வசூலிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ட்விட்டருக்கு கட்டணம்:
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை, எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட அவர், நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு முடிவதற்கு முன்பே 3.62 லட்சம் கோடி கொடுத்து, நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். அவர் இதனை வாங்கியதும் உடனடியாக , ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், அமெரிக்க வாழ் இந்தியருமான பராக் அகர்வாலை அதிரடியாக பதவியிலிருந்து நீக்கினார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அவருக்கு, நஷ்ட ஈடாக 346 கோடி வழங்க உள்ளதாக அறிவித்தார். அவரோடு சேர்த்து பல முக்கிய பதவியில் இருந்தவர்களையும் மஸ்க் நீக்கினார். இதனால், இவரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், என பலரும் யோசித்து வந்த நிலையில், திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது, ட்விட்டரில் ப்ளூ டிக் கொடுக்கப்பட்டுள்ள கணக்கு வைத்திருப்போரிடம், மாதந்தோறும் ரூபாய் 1600 வசூலிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் வைத்திருப்பது அதிகாரப்பூர்வ கணக்கு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இது குறித்த முறையான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.