தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே மின் கட்டணம் செலுத்துவற்காக அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அதனை ஜூலை 31 வரை நீட்டிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளித்து உள்ளது. அதில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – முழு ஊரடங்கு எதிரொலி…!
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ஜூன் 22ல் தெரிவிக்கப்படும் எனவும், பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது என கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் ஜூன் 22ல் தீர்ப்பு வழங்கப்படும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.