உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட நேர மாற்றம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

0

மாநில தேர்தல் ஆணையமானது உள்ளாட்சி தேர்தல் நேரத்தை நீட்டித்துள்ளது. அதன்படி காலை 7 முதல் மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையமானது சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தேர்தல் நேரம் நீட்டிப்பு:

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டுள்ளது. கொரானாவின் காரணமாக இதற்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தல் தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது.

அதன்படி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள்  செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க உத்தரவு ஒன்றினை பிறப்பித்தனர். இதனால் உள்ளாட்சி  தேர்தல் நடைபெறாத இந்த  9 மாவட்டங்களுக்கும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. மேலும் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 பொதுவாக உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை ஐந்தரை மணிவரை இருக்கும். ஆனால் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கும் வகையில் தேர்தல் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நேரமானது  நீட்டிக்கப்பட்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரமானது காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிவரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here