சென்னை மெட்ரோவில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே இருப்பதால் இப்போது அங்கு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை உருவாக்கும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்னும் சில மாதங்களில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பயணிகளுக்கு மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரயில்வேயின் ஒருங்கிணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்தும் இடம் எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்கு பக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
வரி செலுத்துவோர் ஒரு கோடி பேருக்கு நிவாரணம்., நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!!!