நாடு முழுவதும் 12க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள், இந்த ஆண்டிற்கான கல்வி கடன் விநியோகத்தை பகுதியாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
திடீர் முடிவு:
நாடு முழுவதிலும் உள்ள பொது துறை மற்றும் தனியார் வங்கிகளில் கல்வி, விவசாயம் மற்றும் தொழில் போன்ற பல்வேறு செயல்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், பயனர்களுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில், பொதுத்துறை வங்கிகள் கல்விக் கடன்களை இதுவரை அளித்து வந்தது. தற்போது நாடு முழுவதும் உள்ள 12க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள், இந்த ஆண்டு தங்கள் வழங்க உள்ள கல்வி கடனுக்கான இலக்கை 13.5% குறைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? இது தெரியாம தான் இவ்ளோ நாளா Delete பண்ணிட்டு இருந்தோமா?
கடந்தாண்டு ரூபாய் 23,640 கோடி வழங்கிய வங்கிகள், நடப்பாண்டு வெறும் ரூ. 20,450 கோடி மட்டுமே கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.