கெஜ்ரிவால் கைதுக்கு ஆதாரம் இருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிரடி!!!

0
கெஜ்ரிவால் கைதுக்கு ஆதாரம் இருக்கு? டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிரடி!!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மது ஊழல் வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கெஜ்ரிவாலின் தரப்பினர் இந்த வழக்கை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில் தேர்தல் நேரத்தில் கைது செய்தது மிகவும் தவறு என குறிப்பிடப்பட்டனர். இது குறித்து அமலாக்கத் துறையினரிடம் டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது என்று கூறுவது எப்படி சரியாகும்.
போதுமான ஆதாரங்கள் இருந்ததால் தான் நாங்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தோம். ஒருவேளை அரசியலில் இருந்து கொண்டு தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? அது போன்று தான் இந்த வழக்கும். மேலும் கெஜ்ரிவால் முறைகேட்டில் ஈடுபட்டதற்கு இப்போது ஆதாரங்கள் உள்ளது. மேலும் அவர் உண்மையிலேயே முறைகேட்டில் ஈடுபட்டாரா இல்லையா என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிந்து கொள்ள முடியும் என அமலாக்கத்துறையினர் பதிலளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here