தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை தொடர்ந்து இப்போது தனியார் பள்ளிகளிலும் 2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கிவிட்டது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் 25 சதவீத காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சம்பந்தப்பட்ட பள்ளிகளில் எத்தனை காலியிடம் உள்ளது என்பதை www.tnemis.tnschools.gov.in என்ற இணையதளத்திலும், பள்ளிகளிலும் ஏப்ரல் 10ம் தேதி வெளியிடப்படும்.
அதன்படி தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி மே 21 ஆம் தேதிக்குள் மாணவர்கள் சேர்க்கை முடிக்க வேண்டும் எனவும் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.