நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் பள்ளிகள் அரைநாள் செயல்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து இப்போது ஆந்திரா அரசு கொளுத்தும் வெயிலால் மாணவர்கள் எந்த ஒரு சிரமத்தையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக கோடை விடுமுறையை ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஜூன் 13ஆம் தேதி வரை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு 50 நாட்கள் வரை விடுமுறை விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.