கடந்த ஆண்டு நாடு முழுவதும் வெங்காயம் விலை உச்சத்தில் இருந்ததால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு வெங்காயம் ஏற்றுமதிக்கு மார்ச் 31 வரை மத்திய அரசு தடை விதித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வெங்காயம் ஏற்றுமதி தடை தொடரும் என தெரிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 4 தேர்வில் எளிதில் வெற்றி பெற இத பண்ணுங்க.., சூப்பர் அப்டேட்!!!
இதனால் வெங்காயம் விவசாயிகள் பலரும் மிகுந்த அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அடுத்த 2, 3 நாட்களில் 5 லட்சம் டன் ரபி பருவ வெங்காயத்தை நேரடி கொள்முதல் செய்யும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை என்சிசிஎஃப் மற்றும் நாஃபெட் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது.