நாடு முழுவதும் ஆரோக்கியமான இளைஞர் சமுகத்தை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய இ-சிகரெட்டை, கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு தடை செய்தது. இருந்தபோதிலும், ஆன்லைன் மூலம் இளைஞர்கள் இ-சிகரெட் வாங்குவதாக தகவல் வெளிவந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘திங்க் சேஞ்ச் ஃபோரம்’ என்ற சிந்தனைக் குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் இ-சிகரெட் அபாயம் குறித்த விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தி வருகின்றனர்.