ஓட்டுநர் உரிமத்திற்கான மற்றும் பிற சான்றிந்தல்களுக்கான காலாவதி தேதியை டிசம்பர் மாதம் வரை நீடித்துள்ளது, இந்திய அரசு.
கொரோனா பொதுமுடக்கம்:
கடந்த மார்ச் மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் இன்னும் முடிவு பெறவில்லை. அதனை, ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்துள்ளது, இந்திய அரசு. இதனால் பல சிரமங்களுக்கு மக்கள் உள்ளாகினர். அந்த வகையில், ஓட்டுநர் உரிமம், தகுதி சான்றிதழ், வாகன பதிவு சான்றிதழ் போன்றவற்றை புதுப்பிக்க முடியாத சூழ்நிலையில் மக்கள் இருந்து வந்தனர்.
டிசம்பர் வரை நீட்டிப்பு:
மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் வாகன ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்து உள்ளது. இதன் மூலமாக வாகன ஓட்டிகள் வரும் டிசம்பர் வரை தங்கள் ஆவணங்களை புதிப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு மத்திய சாலை போக்குவரத்துக்கு துறை அமைச்சகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான உரிம காலாவதி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.