சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணிகள் காரணமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குடிநீர் தண்ணீர் எடுத்துச் செல்லும் விதமாக 750 மி.மீ. விட்டமுள்ள பிரதான உந்து குழாயுடன் 750 மி.மீ. விட்டமுள்ள பிரதான உந்து குழாயை இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் ஸ்டெர்லிங் சாலையில் மேற்கொள்ள இருக்கிறது.
எனவே நாளை ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 7 மணி முதல் செப்டம்பர் 1ம் தேதி பிற்பகல் 3 மணி வரை மண்டலம் 9 தேனாம்பேட்டைக்குட்பட்ட ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை,பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. .