அதிமுக கட்சி கொடியை சசிகலா தனது வாகனத்தில் பயன்படுத்தியதாக கூறி சசிகலாவுக்கு எதிர்ப்புகள் வலுத்து கொண்டிருக்கும் நிலையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சிறையிலிருந்து விடுதலையான சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக கூறி அதிமுகவினர் சசிகலாவுக்கு எதிராக குற்றம் சாட்டி வருகின்றனர். இதையடுத்து, தமிழ்நாட்டின் மாநில நிதியமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவின் வருகை பற்றி தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலாவின் வருகையால் பதட்டம் அதிமுகவுக்கு அல்ல, பதட்டம் தினகரனுக்கே உள்ளது’ என பேசினார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஜனவரி மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது – ஐசிசி அறிவிப்பு!!
தொடர்ந்து, ‘அதிமுகவில் ஸ்லீப்பர் செல்ஸ் கிடையாது. ஆனால் சில எட்டப்பன்கள் தான் உள்ளனர். திமுகவின் B டீம் தான் சசிகலாவும் தினகரனும். வரப்போகும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதிமுக கட்சி அமமுகவுடன் இணைவதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. ஒருபோதும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க மாட்டோம். அதிமுகவின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாரும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது இல்லை என ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம்’ என கூறினார்.