தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உள்ள, இயக்குனர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொற்று உறுதி :
தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் பிரபல, இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் என்பதும், நடிகர் தனுஷின் அண்ணன் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இவர் இயக்கத்தில் வெளிவந்த, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது, இவர் சாணிக்காயிதம் மற்றும் பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் அனைவரும், மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். இவர் மீண்டு வர ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர்.
???? pic.twitter.com/jqqPQVEVOT
— selvaraghavan (@selvaraghavan) January 23, 2022