தமிழ் சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் நுழைந்து தற்போது சிறந்த நடிகர் என்ற உச்சத்தில் இருப்பவர் தான் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி உருவாக இருக்கிறது. இன்னும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கும் நிலையில் ஒரு படத்தில் இருந்து அஜித்தை தூக்க இயக்குனர் முடிவெடுத்திருந்தாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அந்தணன் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது நடிகர் அஜித் செகண்ட் ஹீரோவாக நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் போது அவருக்கு பெரிய அளவில் விபத்து ஏற்பட்டதாம். அதனால் அவரால் நடக்க முடியாமல் போனதாம். அஜித்தால் ஷூட்டிங் தாமதமாகும் என்று படத்தோட இயக்குனர் ராஜீவ் மேனன் அவரை தூக்கிவிட்டு வேறொரு நடிகரை நடிக்க வைக்க தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டாராம்.
என்னது.., வீடு மட்டும் ரெண்டு இல்லையா.., பிக்பாஸும் 2 தானா? இது என்னடா புதுசா இருக்கு!!!
இந்த விஷயம் அஜித்துக்கு தெரிய வர உடனே தாணு ஆபிஸ்க்கு சென்று “சார், நான் இந்த படத்துல நடிக்கணும், ஒரு வாரத்தில் நான் நடக்க ஆரம்பித்து விடுவேன்” என்று கேட்டுக் கொண்ட பின்னரே தாணு சாந்தமானார். அதன் பின் அஜித் கூறியபடியே ஒரே வாரத்தில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு படத்தை நடித்து கொடுத்தாராம். இதனை காரணம் காட்டி அப்போது இருந்து இப்பொழுது வரை தாணு தயாரிப்பில் அஜித் நடிக்க மறுக்கிறார் என்று அந்தணன் கூறியுள்ளார்.