கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் மாவீரன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பேட்டியாளர் சந்திப்பில் பேசிய மிஷ்கின், இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது சில வருடங்களுக்கு முன் சிவா ஒரு மேடையில் மிமிக்கிரி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த மிஷ்கின் புல் போதையில் இருந்துள்ளார். மேலும் உனக்கு மிமிக்ரி நன்றாக வருகிறது, ஆனா நீ வேற ட்ரை பண்ணனும் என கூறியுள்ளார். ஆனால் இன்று சிவா ஹீரோவாக நடித்துள்ள படத்தில் தான் நடித்துள்ளதை நினைத்து மிஷ்கின் நெகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.