இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் நேசன் குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்களை பெற்ற போதிலும், தற்போது அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் இப்பொழுது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இப்படம் 300 கோடிகளை கடந்து ஆட்டநாயகனாக இருந்து வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய் தீவிரமாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. மேலும் பெரிய எதிர்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது இயக்குனர் நேசன் குறித்து ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது விஜய்யை வைத்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தை இயக்கிய நேசன், தன்னிடம் விஜய்க்கு கதை இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மீண்டும் சூடுபிடிக்கும் கௌதம் மேனனின் “துருவ நட்சத்திரம்” ஷூட்டிங்.., வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!
இதை இயக்குனர் பத்ரியிடம் சொல்லியுள்ளார். இதுகுறித்து பத்ரி ட்விட்டர் பக்கத்தில் நேசனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, “மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப் தான். தளபதி விஜய்க்காக நேசனின் புதிய ஸ்கிரிப்ட் ஒன்றைக் கேட்டேன். சிறப்பாக இருந்தது. தளபதி விஜய் இதைக் கேட்டு கண்டிப்பாக படம் நிறைவேறும் என்று நான் நம்புகிறேன். இது நடந்தால் தளபதி ரசிகர்களுக்கு அட்டகாசமாக இருக்கும்” என பத்ரி வெங்கடேஷ் குறிப்பிட்