இத நீங்க அன்னைக்கே செஞ்சிருக்கலாமே தோனி – கதறும் ரசிகர்கள்!!

0

நேற்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் தங்களது ஐபிஎல் போட்டியை விளையாடினர். இந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த போட்டியில் தோனி செய்த செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

தோனி:

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் கொரோனாவிற்கு எதிரான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 188 ரன்களை குவித்தது. அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி 143 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. சென்னை அணியின் அலி மற்றும் ஜடேஜா தங்களது மாயாஜாலத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முடிவில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்நிலையில் சென்னை அணி கேப்டன் தோனி நேற்று செய்த ஒரு செயல் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. தோனி நேற்று பேட்டிங்கிற்காக களத்திற்கு வந்தார். அவர் இறங்கிய அடுத்த நொடியே ரன் அவுட் ஆகும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர் விரைவாக ஓடி டைவ் அடித்து கிரிசிற்குள் சென்றார்.

நீங்க வேற லெவல் சார் – தன் உயிரை பொருட்படுத்தாமல் குழந்தையின் உயிரை காப்பாற்றிய ரயில்வே ஊழியர்!!

மூன்றாவது நடுவர் அதனை பார்க்கையில் நாட் அவுட் என்று அறிவித்தார். தோனி டைவ் அடித்ததை பார்த்த ரசிகர்களுக்கு 2019ம் ஆண்டின் உலக கோப்பை அரை இறுதி போட்டி நினைவிற்கு வந்தது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி அன்று டைவ் அடித்திருந்தால் உலக கோப்பை முடிவில் கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டிருக்கும். தற்போது இதனை குறித்து இந்தியா மற்றும் தோனி ரசிகர்கள் இதை அன்றே செய்திருக்கலாமே என்று கலங்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here