இந்தியாவில் கடந்த சில தினங்களாக புதிய உச்சத்தை அடைந்து வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது. நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா நோய்பரவல்:
இந்தியாவில் கடந்த சில தினங்களாகவே கொரோனா நோய்த்தொற்று புதிய உச்சமாக நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்தை கடந்து வந்தது. நேற்று முன்தினம் மட்டும் இந்தியாவில் 2,73,810 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிப்பை ஒப்பிடுகையில் இந்தியாவில் நேற்று ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. அதன்படி நேற்று இந்தியாவில் 2,59,170 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,21,089 அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 1,761 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,530 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர்.
இரவு 8 மணி முதல் ஊரடங்கு அமல் – மாநில முதல்வர் அதிரடி நடவடிக்கை!!
இதனால் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,30,08,582 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 20,31,977 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று வேதனைக்குரியதே.