ஐஸ்வர்யா, தனுஷ் தம்பதியின் மூத்த மகன், அவர் படிக்கும் பள்ளியில் விளையாட்டு அணி கேப்டனாக பொறுப்பேற்றுள்ள மகிழ்ச்சி தருணத்தை போட்டோ எடுத்து ஐஸ்வர்யா தனது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா பதிவு:
விவாகரத்து முடிவுக்கு பின், தனுஷ் ஐஸ்வர்யா தம்பதி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தொடர்ந்து தனது, படம் இயக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல், தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், இருவரும் தங்கள் மூத்த மகன் படிக்கும் பள்ளியில் நடக்கும் ஒரு விழாவுக்கு சென்றுள்ளனர். அங்கு தனது மகன், பள்ளியில் நடக்கும் விழாவில் விளையாட்டு அணி கேப்டனாக, அதாவது அணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
மகனுக்கு கிடைத்த இந்தப் பொறுப்பினால், நெகிழ்ந்து போன ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட போட்டோவை இன்ஸ்டா ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து குழு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர்.