டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி மது ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அவர் அமலாக்க துறை கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டெல்லி அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதில் அவன்யூ நீதிமன்றம் மீண்டும் முதல்வர் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு 15 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இப்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதுவும் சிறை எண் 2 ல் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.