தமிழகத்தில் வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பணமும் வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் இது குறித்த எந்த அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்த நேரத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழக அரசு பச்சரிசி, வெல்லம், கரும்பு ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 வழங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ஆனால் தற்போது மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் ஜனவரி 2ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அதாவது மாதம் தோறும் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே (ஜனவரி 13ஆம் தேதி) உரிமைத் தொகையை முன்கூட்டியே செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.
சிறு தொழில் துவங்க மானியத்துடன் ரூ.50,000 வரை கடன்., மத்திய அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு!!!