சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வேலை காரணமாக தங்கி இருப்பவர்கள் பலரும், பண்டிகை உள்ளிட்ட விடுமுறை தினங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் எளிய பயணங்களை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் வழியாக நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது ஜனவரி 4 முதல் 25ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு ரூ.1000 வழங்க முடிவு?? வெளியான அறிவிப்பு!!!