இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற உள்ளதை அடுத்து, ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான டேவிட் வார்னர் இந்தியாவிற்கு வந்தடைந்துள்ளார்.
டேவிட் வார்னர்:
அக்டோபர் மாதம் இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடருக்கு தயாராகுவதற்கு, சர்வதேச அணிகள் அனைத்தும், ஒருநாள் தொடரிலேயே அதிக கவனம் செலுத்த கூடும். இந்த வகையில், இந்திய அணியும், வருட தொடக்கத்தில் இருந்தே, இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் தொடர்ச்சி, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 17ம் தேதி முதல் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க மற்றும் முன்னணி வீரரான டேவிட் வார்னர் காயத்திற்கு உள்ளானார். இவர் தற்போது, காயங்களில் இருந்து மீண்டுள்ளதால், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறக்க இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார்.
கிங் கப் ஆப் சாம்பியன்: முதல் காலிறுதியில் வென்ற ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி!!
இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தெரிவித்துள்ளார். அதாவது, இவர் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து, “Out and about” என்ற கேப்சனுடன் வெளியிட்டுள்ளார். மேலும், ஹாஸ்டக் மும்பை, ஹாஸ்டக் இந்தியா என்றும் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram