தமிழ்நாட்டில் +1, +2 வகுப்புக்கான பொதுத்தேர்வு பரபரப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது. இதில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாதபடி மாநிலம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என மின்வாரிய துறை உத்தரவிட்டு இருந்தது. இதனால் மின் ஊழியர்கள் ஓய்வில்லாத பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் 2023-24 ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20ம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து மின்வாரியத்துறை தங்கள் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பரவும் வைரஸ் இதுதான்., சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!!
அதன்படி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் காலங்களில் அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் மின் ஊழியர்கள் விரைந்து செயல்பட வேண்டும். இதனால் மின் ஊழியர்கள் வெளியூர் உள்ளிட்ட பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதேபோல் அலுவலகத்திற்கு காலை 09.30 மணிக்கு முன்னதாகவே வருகை தர வேண்டும் என்றும் மின்வாரியத்துறை வலியுறுத்தியுள்ளது.