ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி பரிசுகளும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வெளியூர் வாசிகள் மற்றும் பரிசுகளைப் பெற தவற விட்டோர் ஆகியோரை கருத்தில் கொண்டு பொங்கல் பரிசு பெறுவதற்கான தேதியானது ஜனவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசினை இதுவரை பெறாதவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.