மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 4 சதவீதம் உயர்த்தியது முதல் பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு DA உயர்வை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழக (டிஎஸ்ஆர்டிசி) ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31.8 சதவீதத்தில் இருந்து 43.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் DA உயர்வு மட்டுமல்லாமல் அண்மையில் RTC ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு TSRTC ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.