நடப்பு 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், நேற்று (மார்ச் 22) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய நிலையில், CSK vs RCB அணிகள் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையில் CSK vs RCB போட்டியை நேரில் காண முன்பதிவு செய்தவர்கள், சென்னை மாநகர பேருந்தில் சேப்பாக்கத்திற்கு இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்து இருந்தனர்.
அடக்கடவுளே.. இரண்டாவது மனைவியாகும் நடிகை அஞ்சலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இந்நிலையில் இது தவறான செய்தி என தமிழக அரசின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. அதாவது சிஎஸ்கே நிர்வாகம் போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்து பயணச் செலவை செலுத்திவிட்டனர். இதனால் அரசுக்கு எந்தவிதமான செலவும் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.