இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் வங்கியில் பணம் சேமிப்பதே அதிகளவில் விரும்புகின்றனர். ஆனாலும் வங்கி கணக்கு மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்க, டெபாசிட் வரம்பை நிர்ணயித்துள்ளனர். அதன்படி சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஓரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் வரையில் மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய முடியும் என தெரிவித்துள்ளனர்.
இந்த தொகைக்கு மேல் சேமித்து வைத்திருக்கும் பட்சத்தில், அதற்கு வருமான வரி விதிக்கப்படும். அதேபோல் டெபாசிட் வரம்பை மீறும் பரிவர்த்தனைகளுக்கு, வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பவும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.